கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அரசமர விநாயகர் கோயிலில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனது தொடர்பாக இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அரசமர விநாயகர் கோயிலில் இருந்த விநாயகர் சிலை மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பாக இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை சாய்பாபாகாலனி ஜீவா நகர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக அரசமர விநாயகர் கோவில் உள்ளது. இந்த அரசமர கோவில் விநாயகர் சிலை தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை கோவில் பூசாரி வழக்கம் போல சிலைக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது, விநாயகர் சிலை இருந்த இடத்தில் சிலை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து கோவில் பூசாரியும் இந்து முன்னணியினரும் விநாயகர் சிலை காணாமல் போனது தொடர்பாக கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த புகாரில் சிலை காணாமல் போனது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை சாய்பாபாகாலனி ஜீவா நகர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக அரசமர விநாயகர் கோவில் உள்ளது. இந்த அரசமர கோவில் விநாயகர் சிலை தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை கோவில் பூசாரி வழக்கம் போல சிலைக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது, விநாயகர் சிலை இருந்த இடத்தில் சிலை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து கோவில் பூசாரியும் இந்து முன்னணியினரும் விநாயகர் சிலை காணாமல் போனது தொடர்பாக கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த புகாரில் சிலை காணாமல் போனது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.