நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தனியார் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் 820 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தனியார் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் 820 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் திங்கட்கிழமை ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் இப்பகுதியில் உள்ள படுகர் இன மக்கள் வாழும் சிறிய சிறிய கிராமங்களில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக உதகையில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
அதன் படி, உதகையில் மட்டும் தற்போது 820 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. மேலும் குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளிலும் சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.