திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.

இந்த நிலையில், இன்று திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாது காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்குமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் மருந்துக் கடைகள் மூலமாக காய்ச்சல் மருந்துகள் அதிக அளவில் விற்பனையான பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.
இந்த நிலையில், இன்று திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாது காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்குமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் மருந்துக் கடைகள் மூலமாக காய்ச்சல் மருந்துகள் அதிக அளவில் விற்பனையான பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.