கோவை: கோவை மாநகர காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு காவலர்கள் தவிர்த்து வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கபட்டு உள்ளது.
கோவை: கோவை மாநகர காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு காவலர்கள் தவிர்த்து வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கபட்டு உள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை, பொருளாதார குற்றபிரிவு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. இங்கு அமைச்சு பணியாளர்கள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக, கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் துடியலூர் மற்றும் போத்தனூர் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்றபிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதனைையடுத்து, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு போலீசார் தவிர யாரும் உள்ளே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை, பொருளாதார குற்றபிரிவு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. இங்கு அமைச்சு பணியாளர்கள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக, கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் துடியலூர் மற்றும் போத்தனூர் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்றபிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதனைையடுத்து, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு போலீசார் தவிர யாரும் உள்ளே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.