கோவை: கோவையில் நகைப்பட்டறை உரிமையாளரை வடமாநில பட்டறை தொழிலாளர்கள் மிரட்டுவதாக, நகை பட்டறை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
கோவை: கோவையில் நகைப்பட்டறை உரிமையாளரை வடமாநில பட்டறை தொழிலாளர்கள் மிரட்டுவதாக, நகை பட்டறை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
கடந்த வாரம் செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு நகை பட்டறையில் தொழிலாளர்கள் சமூக இடைவெளி இன்றியும் முகக்கவசம் அணியாமலும் பணியாற்றிய நிலையில், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ராசாமணி நகை பட்டறைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக செல்வபுரம், சலிவன் வீதி, தெலுங்குபாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இயங்கும் நகைப் பட்டறைகள் மறு உத்தரவு வரும் வரை பட்டறைகளை திறக்க தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சலிவன் வீதியில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு சொந்தமான நகைப் பட்டறை ஒன்றில், வடமாநில நகை பட்டறை தொழிலாளர்கள் சுமார் 40 பேர் தனிமனித இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் பணியாற்றுவதாக அதே பகுதியில் நகை பட்டறை வைத்திருக்கும் பாபு என்பவர் வீடியோ ஆதாரத்துடன் மாநகராட்சிக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் தடை உத்தரவை மீறி இயங்கி வந்த நகை பட்டறைக்கு நேற்று, சீல் வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வடமாநில நகைப் பட்டறை தொழிலாளிகள், அவர்கள் மீது புகார் அளித்த பாபுவை மிரட்டுவதாக நகைப் பட்டறை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பி1 காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த பட்டறையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு, ஆதார் உள்ளிட்ட எந்தவித அடையாள அட்டையும் இல்லை என்றும் குற்றம் சாட்டிய நகைப் பட்டறை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
கடந்த வாரம் செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு நகை பட்டறையில் தொழிலாளர்கள் சமூக இடைவெளி இன்றியும் முகக்கவசம் அணியாமலும் பணியாற்றிய நிலையில், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ராசாமணி நகை பட்டறைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக செல்வபுரம், சலிவன் வீதி, தெலுங்குபாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இயங்கும் நகைப் பட்டறைகள் மறு உத்தரவு வரும் வரை பட்டறைகளை திறக்க தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சலிவன் வீதியில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு சொந்தமான நகைப் பட்டறை ஒன்றில், வடமாநில நகை பட்டறை தொழிலாளர்கள் சுமார் 40 பேர் தனிமனித இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் பணியாற்றுவதாக அதே பகுதியில் நகை பட்டறை வைத்திருக்கும் பாபு என்பவர் வீடியோ ஆதாரத்துடன் மாநகராட்சிக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் தடை உத்தரவை மீறி இயங்கி வந்த நகை பட்டறைக்கு நேற்று, சீல் வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வடமாநில நகைப் பட்டறை தொழிலாளிகள், அவர்கள் மீது புகார் அளித்த பாபுவை மிரட்டுவதாக நகைப் பட்டறை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பி1 காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த பட்டறையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு, ஆதார் உள்ளிட்ட எந்தவித அடையாள அட்டையும் இல்லை என்றும் குற்றம் சாட்டிய நகைப் பட்டறை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.