கோவை: மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆறு மாசடைவதை தடுக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு ரூ 91 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கபட்டன.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், கடந்த ஓராண்டிற்கும் மேலாக மூடப்படாததால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, மேட்டுப்பாளையம் உதகை சாலையில் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக நகர செயலாளர் முகம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ அருண்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கட்சித் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசையும் உள்ளாட்ச்சித்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆறு மாசடைவதை தடுக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு ரூ 91 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கபட்டன.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், கடந்த ஓராண்டிற்கும் மேலாக மூடப்படாததால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, மேட்டுப்பாளையம் உதகை சாலையில் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக நகர செயலாளர் முகம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ அருண்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கட்சித் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசையும் உள்ளாட்ச்சித்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன.