கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் படுகாயம்; மேனேஜர் இருவர் மீது வழக்கு

கோவை: கோவை சுங்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் தொழில் செய்ய சென்ற இளைஞரை வலுக்கட்டாயமாக மின் சம்பத்தப்பட்ட வேலையை பார்க்கும்படி மேனேஜர் வற்புறுத்தியதால், அந்த இளைஞரை மின்சாரம் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை சுங்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் தொழில் செய்ய சென்ற இளைஞரை வலுக்கட்டாயமாக மின் சம்பத்தப்பட்ட வேலையை பார்க்கும்படி மேனேஜர் வற்புறுத்தியதால், அந்த இளைஞரை மின்சாரம் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை புலியகுளம் பகுதியிலுள்ள ஈஸ்வரன் செட்டியார் லேஅவுட், பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் அந்தோணி குருஸ் (26). பெயிண்டிங் தொழில் செய்து வரும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் அந்தோணி குரூஸ் கடந்த சனிக்கிழமை வழக்கம் போல கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள மெட்ரோ பார்க் என்ற அப்பார்மெண்ட்டில் பெயிண்டிங் வேலை செய்ய சென்றுள்ளார்.

அப்போது, அந்த அப்பார்ட்மெண்டின் மேனேஜர் விவேக் மற்றும் மோகன் ஆகியோர் அவ்வளாகத்தில் உள்ள மின்கம்பத்தில் அந்த இளைஞரை பெயிண்ட் அடிக்க வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மின்கம்பத்தில் பணிபுரியும் போது தனக்கு ஆபத்து நேரிடலாம் என்பதை உணர்ந்த, அந்தோணி குரூஸ் "நான் மின்கம்பத்தில் ஏற மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், விவேக் மற்றும் மோகன் அவர்கள் மின்சாரத்தை அணைத்து வைத்து உள்ளதாகவும், ஒன்றும் ஆகாது என அந்தோணியை

வற்புறுத்திதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேலே ஏறிய அந்தோணி, கம்பத்தின் மீது பெயிண்ட் அடிக்க முற்படும் போது மின்சாரம் தாக்கி மேலே இருந்து தூக்கி வீசப்பட்டார்.



இதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் உத்தரவின்பேரில் விவேக், மோகன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 338 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய இழப்பீடு வேண்டும் எனவும், உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குடும்பத்தார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...