கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1291 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கோவையில் 960 பேர் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருவதாகவும், கோவை மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கோவை மாவட்ட பொதுமக்கள் அறிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, நீங்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக 95858-55577 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.