கோவை: வால்பாறைக்கு வனவிலங்குகளை படம் பிடிக்க வந்தவர்கள் சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கோவை: வால்பாறைக்கு வனவிலங்குகளை படம் பிடிக்க வந்தவர்கள் சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவற்றை படம் பிடிக்க ஏராளமான வன விலங்கு ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர். தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக வால்பாறை பகுதிக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அட்டகட்டி பகுதியில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து வன விலங்கு உயிரின ஆர்வலர்கள் வால்பாறை பகுதியில் வனவிலங்குகளை படம் பிடிக்க வந்துள்ளனர்.
அப்போது, அவர்களை அட்டகட்டி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். வனவிலங்குகளை படமெடுக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். விசாரணையில் அக்கடிதம் கொரோனா தொற்று தடை காலத்திற்கு முன் பெறப்பட்டது என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அக்குழுவினரை வால்பாறை பகுதிக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவற்றை படம் பிடிக்க ஏராளமான வன விலங்கு ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர். தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக வால்பாறை பகுதிக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அட்டகட்டி பகுதியில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து வன விலங்கு உயிரின ஆர்வலர்கள் வால்பாறை பகுதியில் வனவிலங்குகளை படம் பிடிக்க வந்துள்ளனர்.
அப்போது, அவர்களை அட்டகட்டி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். வனவிலங்குகளை படமெடுக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். விசாரணையில் அக்கடிதம் கொரோனா தொற்று தடை காலத்திற்கு முன் பெறப்பட்டது என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அக்குழுவினரை வால்பாறை பகுதிக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.