வால்பாறையில் தொழிற்சங்க கூட்டுக் குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்க கூட்டுக் குழுவின் கூட்டம் குழுத்தலைவர் வால்பாறை அமீது தலைமையிலும் எல்.பி.எப் சௌந்தரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்க கூட்டுக் குழுவின் கூட்டம் குழுத்தலைவர் வால்பாறை அமீது தலைமையிலும் எல்.பி.எப் சௌந்தரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. 



இந்த கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ஒட்டி தோட்டத் தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதிக்கு வானங்களில் வரும் காய்கறி சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஏதுவாக சனிக்கிழமைகளில் பன்னிரண்டு மணிக்கு பணிகளை முடித்துவிட்டு அனுப்ப வேண்டும், உடல்நலக்குறைவு ஏற்படும் தொழிலாளர்கள் தற்போதைய சூழலில் பொள்ளாச்சி கோவை மருத்துவமனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தோட்ட நிர்வாகங்கள் மருத்துவமனைகளை மேம்படுத்தி சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும், குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள புதர்களை அகற்ற வேண்டும், அட்டகட்டி சோதனை மையத்தில் தீவிர சோதனைகளை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும், தமிழக தோட்ட அதிபர்கள் சங்கம், ஆனைமலை தோட்டா அதிபர்கள் சங்கம் இதுகுறித்து தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. 

இந்த கூட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் வால்பாறை அமீது, கருப்பையா ஐஎன்டியூசி மோகன்ஏஐடியுசி, ஏஐடியுசி வீரமணி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...