பொள்ளாச்சி அருகே முள்ளம்பன்றியை வேட்டையாடிய 4 நபர்களிடம் ரூபாய் 52,000 அபராதம் விதித்த வனத்துறையினர்
கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை, மாங்கரை வனப்பகுதியில் முயல், மான், முள்ளம்பன்றி, உடும்பு என ஏராளமான சிறு வன உயிர்கள் அதிக அளவில் உள்ளன.
அங்குள்ள சிலர் இந்த வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்
பேரில், வனத்துறையின் கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்படி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனத்துறையினர் ரோந்து சென்ற போது சந்தேகத்துக்கிடமான 4 பேரை விசாரணை செய்தனர். அப்போது, விசாரணையில் அவர்கள்மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயபால், கனகராஜ்,
கார்த்திகுமார் எனவும், முள்ளம் பன்றியை வேட்டையாடியதும்தெரியவந்தது.
இதையடுத்து வேட்டை ஆடியமுள்ளம்பன்றியை கைப்பற்றிய வனத்துறையினர், நான்கு நபர்களையும் ஆனைமலை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். விசாரனையில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக, நபருக்கு ரூ 13,000 என 52,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டையாடினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என வனச்சரகர் காசிலிங்கம் தெரிவித்தார்.
அங்குள்ள சிலர் இந்த வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்
பேரில், வனத்துறையின் கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்படி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனத்துறையினர் ரோந்து சென்ற போது சந்தேகத்துக்கிடமான 4 பேரை விசாரணை செய்தனர். அப்போது, விசாரணையில் அவர்கள்மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயபால், கனகராஜ்,
கார்த்திகுமார் எனவும், முள்ளம் பன்றியை வேட்டையாடியதும்தெரியவந்தது.
இதையடுத்து வேட்டை ஆடியமுள்ளம்பன்றியை கைப்பற்றிய வனத்துறையினர், நான்கு நபர்களையும் ஆனைமலை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். விசாரனையில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக, நபருக்கு ரூ 13,000 என 52,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டையாடினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என வனச்சரகர் காசிலிங்கம் தெரிவித்தார்.