கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..! ஒருவர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1261 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மேலும், கோவையில் 931 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் நாளுக்கு நாள் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முகவரி மற்றும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் குறித்த முழு விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் தற்போது வரை வழங்கப்படுவதில்லை.

ஆகவே, கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கோவை மாவட்ட பொதுமக்கள் அறிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே, நீங்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக 95858-55577 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Update @9:15 PM - The district administration has given area wise breakup of the cases listed today in the state bulletin. Out of the 117 cases, 82 cases are cluster cases with more than one case in each area. 35 cases are from other areas with one case each. 

1.  Selvapuram – 20 cases

2.  Ukkadam KG Street - 10 cases

3.  AD colony, MuthaliPalayam, Annur Mettupalayam – 7 cases

4.  Ganapathy Managar - 6 cases

5. Sullivan Street - 6 cases

6. Elahi Nagar, second Street, Saramedu - 5 cases

7. Kempatty colony, 7th Street, Town Hall – 5 cases

8. Jothipuram - 4 cases

9. Fifth Street, Kurrathul layout, ittery, Kurichi Pirivu – 4 cases

10. Vinayapuram, Saravanampatti - 3 cases

11. Sakkarai Chettiar Street, Uppilipalayam - 2 cases

12. Nehru ji Street, Semmedu - 2 cases

13. Lakshmi Nagar, Thanneer Pandhal Peelamedu - 2 cases

14. Kandasamy Nagar, Press colony, Veerapandi – two cases

15. Karuppiah Street – 2 cases

16. Telengupalayam –2 cases

17. Other areas with individual cases - 35 cases 

18. Other HUD cases - 2 cases

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...