கோவை ஒரு அமைதியான மாவட்டம்; சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்துப்படும் - கோவையின் புதிய காவல் கண்காணிப்பாளர்

கோவை: கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துபடும் என கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற அருளரசு ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துபடும் என கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற அருளரசு ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 59 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கடந்த வாரம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித் குமார், ஐபிஎஸ் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அருளரசு, ஐபிஎஸ் கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.



இதன்படி, இன்று பதவி ஏற்று, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியேற்ற அவருக்கு காவல்துறை அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதனை, தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுள்ளேன். கோவை ஒரு அமைதியான மாவட்டம்.இந்த மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும், 9498122422 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். அனைத்து புகார்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...