கோவை: கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து, காவல் நிலையம் மூடப்பட்டது. மேலும், தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து, காவல் நிலையம் மூடப்பட்டது. மேலும், தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு துடியலூர் காவல்நிலையத்தை சேர்ந்த 31 காவலர்களுக்கு கொரானா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை அறிக்கையில் ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 5 பேருக்கு இன்று காலை கொரானா தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து 5 காவலர்களும் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 10 காவலர்களின் சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

தொடர்ந்து, காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, மீண்டும் காவல்நிலையத்தில் உள்ள அனைவருக்கும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக கூறப்படுகிறது.
தொற்று உறுதியான காவலர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவையில், ஒரே காவல்நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதியானது அங்கு உள்ளவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.