கோவை துடியலூர் காவல் நிலையத்தில் போலீசார் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; காவல் நிலையம் மூடல்

கோவை: கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து, காவல் நிலையம் மூடப்பட்டது. மேலும், தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட பணிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து, காவல் நிலையம் மூடப்பட்டது. மேலும், தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு துடியலூர் காவல்நிலையத்தை சேர்ந்த 31 காவலர்களுக்கு கொரானா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை அறிக்கையில் ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 5 பேருக்கு இன்று காலை கொரானா தொற்று உறுதியானது.

இதனை தொடர்ந்து 5 காவலர்களும் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 10 காவலர்களின் சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபடுகிறது.



தொடர்ந்து, காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, மீண்டும் காவல்நிலையத்தில் உள்ள அனைவருக்கும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக கூறப்படுகிறது.

தொற்று உறுதியான காவலர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவையில், ஒரே காவல்நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதியானது அங்கு உள்ளவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...