கோவை மற்றும் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையாளர், ராஜீவ் விஜய் நபாருக்கு கொரோனா தொற்று
கோவை: கோவை மற்றும் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையாளர், ராஜீவ் விஜய் நபாருக்கு கொரோனா தொற்று
உறுதியானதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மற்றும் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையர் ராஜீவ் விஜய்நபார், சமீபத்தில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அலுவலக பணிகளை மேற்கொண்டார்.
கடந்த வியாழக்கிழமை கோவைமண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16 அதிகாரிகளுடன், கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரது உடல் நிலை பாதிக்கப்படவே பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு
அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 வருமான வரித்துறை அதிகாரிகளையும் தனிமைபடுத்தி கொள்ளுமாறு சுகாதாரதுறையனர்அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது.
மேலும், கோவை மண்டல வருமான வரித்துறை அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கபட்டு அப்பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் மூலம்சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது குடும்பத்தில் உள்ள மூவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக கூறப்படுகிறது.
உறுதியானதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மற்றும் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையர் ராஜீவ் விஜய்நபார், சமீபத்தில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அலுவலக பணிகளை மேற்கொண்டார்.
கடந்த வியாழக்கிழமை கோவைமண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16 அதிகாரிகளுடன், கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரது உடல் நிலை பாதிக்கப்படவே பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு
அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 வருமான வரித்துறை அதிகாரிகளையும் தனிமைபடுத்தி கொள்ளுமாறு சுகாதாரதுறையனர்அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது.
மேலும், கோவை மண்டல வருமான வரித்துறை அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கபட்டு அப்பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் மூலம்சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது குடும்பத்தில் உள்ள மூவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக கூறப்படுகிறது.