நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள கன்னக்கண்டி ஆதிவாசி கிராமத்தில் உள்ள ஏழை, எளிய, பழங்குடியினர் கிராமங்களில் மஞ்சூர் காவலர்கள் சார்பில் அதன் ஆய்வாளர் தவுலத், பழங்குடியின மக்களுக்கு முகக்கவசம், உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள கன்னக்கண்டி ஆதிவாசி கிராமத்தில் உள்ள ஏழை, எளிய, பழங்குடியினர் கிராமங்களில் மஞ்சூர் காவலர்கள் சார்பில் அதன் ஆய்வாளர் தவுலத், பழங்குடியின மக்களுக்கு முகக்கவசம், உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் குரும்பர், இருளர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதால் மாவட்ட காவல்துறையின் உத்தரவின் பேரில் மஞ்சூர் காவல் நிலையம் சார்பில் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை காவல்நிலைய ஆய்வாளர் தவ்லத் வழங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் குரும்பர், இருளர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதால் மாவட்ட காவல்துறையின் உத்தரவின் பேரில் மஞ்சூர் காவல் நிலையம் சார்பில் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை காவல்நிலைய ஆய்வாளர் தவ்லத் வழங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.