கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு போலீசார் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.
கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு போலீசார் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

கடந்த மூன்று மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் பொள்ளாச்சி - கோவை சாலையில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தினம்தோறும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊசி, பாசி போன்ற பொருள்களை விற்று ஜீவனம் செய்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகளால் இவர்கள் மற்ற பகுதிகளுக்கு சென்று பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு, எண்ணெய் போன்ற நிவாரணப் பொருட்களை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் படி பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், நரிக்குறவர் குடும்பங்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கினார்.
பின்னர் பொதுமக்களிடம் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆதலால் நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் காவல்துறை எல்லா வகை உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது. காவல்துறை உங்கள் நண்பன் என கூறினார். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் மைக்கேல் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் பொள்ளாச்சி - கோவை சாலையில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தினம்தோறும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊசி, பாசி போன்ற பொருள்களை விற்று ஜீவனம் செய்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகளால் இவர்கள் மற்ற பகுதிகளுக்கு சென்று பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு, எண்ணெய் போன்ற நிவாரணப் பொருட்களை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் படி பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், நரிக்குறவர் குடும்பங்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கினார்.
பின்னர் பொதுமக்களிடம் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆதலால் நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் காவல்துறை எல்லா வகை உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது. காவல்துறை உங்கள் நண்பன் என கூறினார். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் மைக்கேல் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.