வால்பாறையில் நகராட்சி கொரோனா முன்கள பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்கிட புத்துணர்ச்சி முகாம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு பணியில் முன் களத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கிடவும் புத்துணர்ச்சி அளித்திடவும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு பணியில் முன் களத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கிடவும் புத்துணர்ச்சி அளித்திடவும் சிறப்பு முகாம் நடைபெற்றது. 



வால்பாறையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து முன்கள பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் குமர குருபரன் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்கிட சிறுகதைகள் பாடல்கள் மற்றும் மூச்சுப்பயிற்சி அளித்தார். 

இதனை தொடர்ந்து, இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பணியாளர்களும் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 



இந்த முகாமில் நகராட்சி உதவி இயக்குநர் குமாரவேல், நகராட்சிகளின் ஆய்வாளர் மனோகரன், நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் கொரோனா முன் களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...