ஆன்லைனில் பாடம் நடத்தினாலும் பெற்றோர்கள் கட்டணம் செலுத்த மறுப்பதாக கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்!

கோவை: ஆன்லைனில் பாடம் நடத்தினாலும் பெற்றோர்கள் கட்டணம் செலுத்த மறுப்பதாகக் கூறி ஆசிரியர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நலசங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: ஆன்லைனில் பாடம் நடத்தினாலும் பெற்றோர்கள் கட்டணம் கட்ட மறுப்பதாகக்கூறி ஆசிரியர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நலசங்கத்தினர், இன்று கோவை இரத்தினபுரியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவதால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பள்ளி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு விதித்த தடை குறித்து நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் மனு அளித்தன. இதனையடுத்து, விசாரணையில் பெற்றோர்கள் தாமாக முன்வந்து கல்வி கட்டணத்தை வழங்கும் பட்சத்தில் கட்டணத்தை பள்ளிகள் வாங்க தடையில்லை எனவும் தவணை முறையில் பள்ளி கட்டணம் வசூலிக்கலாமா என்பதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மேலும், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ள 248.76 கோடி ரூபாயை கொண்டு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பெற்றோர்கள் பாதிக்கப்படாதவாறு மூன்று தவணைகளாக பள்ளி கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த மார்ச் முதல் ஜூன் வரை சம்பளமில்லாமல் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.



இந்த நிலையில் தமிழக அரசு, பள்ளி கட்டணத்தை பெற்றோர்களை செலுத்த ஆணையிடக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நலச்சங்கத்தினர் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...