நீலகிரி: உதகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற விளம்பரத்துடன் புதிய வகை ஹோம் மேட் சாக்லேட் உற்பத்தி செய்த பிரபல நிறுவனத்திற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்தனர்.
நீலகிரி: உதகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற விளம்பரத்துடன் புதிய வகை ஹோம் மேட் சாக்லேட் உற்பத்தி செய்த பிரபல நிறுவனத்திற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்தனர்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கவரும் வகையில் பல சுவைகளில் உதகையில் ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 100% சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கப்பட்டது. இதனால் ஹோம் மேட் சாக்லேட் தொழில் கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இதனால் வழக்கமாக தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட்க்கு பதிலாக தற்போது கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதிய ரக ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாக்கெட்களின் மேல் பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
கூடலூரில் உற்பத்தி செய்யப்படும் கொக்கோ மூலம் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை கலந்து, எந்த வித ரசாயன கலவை சேர்க்காமல், நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது என சொல்லப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இந்த நிறுவனத்தை ஆய்வு செய்தனர்.

இதில் அரசிடம் இருந்து எந்த விதமான அனுமதியும் பெறாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த சாக்லெட் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்ததால் இந்த தொழிற்சாலைக்கு இன்று சீல் வைத்தனர்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கவரும் வகையில் பல சுவைகளில் உதகையில் ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 100% சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கப்பட்டது. இதனால் ஹோம் மேட் சாக்லேட் தொழில் கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இதனால் வழக்கமாக தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட்க்கு பதிலாக தற்போது கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதிய ரக ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாக்கெட்களின் மேல் பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
கூடலூரில் உற்பத்தி செய்யப்படும் கொக்கோ மூலம் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை கலந்து, எந்த வித ரசாயன கலவை சேர்க்காமல், நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது என சொல்லப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இந்த நிறுவனத்தை ஆய்வு செய்தனர்.
இதில் அரசிடம் இருந்து எந்த விதமான அனுமதியும் பெறாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த சாக்லெட் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்ததால் இந்த தொழிற்சாலைக்கு இன்று சீல் வைத்தனர்.