சாத்தான்குளம் வழக்கு: பாடகி சுசித்திரா வெளியிட்ட வீடியோ உண்மைத் தன்மையற்றது; யாரும் பகிர வேண்டாம் - சிபிசிஐடி

சாத்தான்குளம் வழக்கு: பாடகி சுசித்திரா வெளியிட்ட வீடியோ உண்மைத் தன்மையற்றது; யாரும் பகிர வேண்டாம் என சிபிசிஐடி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கோவை: சாத்தான்குளம்‌ தந்தை - மகன் இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து பிரபல பின்னணி பாடகி சுசித்தரா ஒரு வீடியோவை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார்.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களால் சமூக வலயதலங்களில் பகிரப்பட்டு வந்த அந்த காணொளி முற்றிலும் உண்மைத்தன்மையற்றது என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது :-

தென்னிந்திய பாடகி சுசித்தரா அவர்களால் சமீபத்தில்‌ வெளியிடப்பட்ட சாத்தான்குளம்‌ நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும்‌ உண்மைத்தன்மையற்றது.

மேலும்‌, இது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின்‌ விசாரணையையும்‌ புலனாய்வையும்‌ பாதிக்கும்‌ என மாண்புமிகு சென்னை

உயர்நீதிமன்றம்‌ வழிகாட்டியுள்ளது.

எனவே, பொதுமக்கள்‌ இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம்‌ என காவல்துறை சார்பில்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும், இந்த பதிவினை அனைவரிடமும்‌ எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...