திருப்பூர்: திருப்பூரில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து, 97 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இன்று ஆட்சியர் அறிவித்து அங்கு கூடுதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை வீரபாண்டியில் 70 வயதான முதியவர், வேலம்பாளையத்தில் 18 வயதான சிறுமி, அமர்ஜோதி நகரில் 38 வயதான ஆண் உள்பட பல்வேறு பகுதிகளில் மொத்தம் இன்று மட்டும் 24 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், பாதிப்பின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரில் புதிதாக 230 பேர் என மொத்தம் 3082 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு 307 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று 801 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், முக கவசம் அணியாமல் பொதுவெளியில் இருந்த 618 நபர்களிடமிருந்து, ரூ 81,400/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, 97 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இன்று ஆட்சியர் அறிவித்து அங்கு கூடுதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை வீரபாண்டியில் 70 வயதான முதியவர், வேலம்பாளையத்தில் 18 வயதான சிறுமி, அமர்ஜோதி நகரில் 38 வயதான ஆண் உள்பட பல்வேறு பகுதிகளில் மொத்தம் இன்று மட்டும் 24 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், பாதிப்பின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரில் புதிதாக 230 பேர் என மொத்தம் 3082 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு 307 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று 801 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், முக கவசம் அணியாமல் பொதுவெளியில் இருந்த 618 நபர்களிடமிருந்து, ரூ 81,400/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.