கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 32 இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முதல் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 32 இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முதல் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு முகாமில், கொரோனா அறிகுறிகளாக கருதப்படும் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல் சோர்வு, வயிற்று போக்கு உள்ளிட்ட தொந்தரவுகளால் அவதியுறும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று, கோவையின் ஐந்து மண்டலங்களில் நடைபெற்ற முகாம்களில் 9060 பேர் பங்கேற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நேற்று முதல் இந்த மருத்துவ முகாம் நடந்து வருகிறது. இன்று நடந்த மருத்துவ முகாமில் 9060 ஆயிரம் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில், 373 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது."
மேலும், மக்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி நோய் எதிர்ப்பு மருத்துகளும் வழங்கப்பட்டன,’ என்றார்.
இந்த சிறப்பு முகாமில், கொரோனா அறிகுறிகளாக கருதப்படும் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல் சோர்வு, வயிற்று போக்கு உள்ளிட்ட தொந்தரவுகளால் அவதியுறும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று, கோவையின் ஐந்து மண்டலங்களில் நடைபெற்ற முகாம்களில் 9060 பேர் பங்கேற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நேற்று முதல் இந்த மருத்துவ முகாம் நடந்து வருகிறது. இன்று நடந்த மருத்துவ முகாமில் 9060 ஆயிரம் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில், 373 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது."
மேலும், மக்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி நோய் எதிர்ப்பு மருத்துகளும் வழங்கப்பட்டன,’ என்றார்.