கோவை மாநகராட்சியின் சிறப்பு மருத்துவ முகாமில் இன்று ஒரு நாளில் 9060 பேர் பங்கேற்பு..!

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 32 இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முதல் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 32 இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முதல் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு முகாமில், கொரோனா அறிகுறிகளாக கருதப்படும் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல் சோர்வு, வயிற்று போக்கு உள்ளிட்ட தொந்தரவுகளால் அவதியுறும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று, கோவையின் ஐந்து மண்டலங்களில் நடைபெற்ற முகாம்களில் 9060 பேர் பங்கேற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நேற்று முதல் இந்த மருத்துவ முகாம் நடந்து வருகிறது. இன்று நடந்த மருத்துவ முகாமில் 9060 ஆயிரம் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில், 373 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது."

மேலும், மக்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி நோய் எதிர்ப்பு மருத்துகளும் வழங்கப்பட்டன,’ என்றார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...