கோவை: கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் மலபார் என்ற நகைக்கடையில் பணிபுரியும் மேலும் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் மலபார் தங்க மற்றும் வைர நகைக்கடையில் பணிபுரியும் மேலும் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு நேற்று கொரொனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த நகைக்கடை மூடப்பட்டது. மேலும், அப்பகுதி முழுவதும் தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டது.
இதனிடையே, அக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் காந்திபுரம் 3வது வீதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்த 42 பேருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் மேலும் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அந்த கடையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல, அப்பகுதியில் உள்ள ஆதித்யா ஆட்டோ மொபைல் ஸ்பேர்ஸ் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதி முழுவதும் 10 நாட்களுக்கு அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு நேற்று கொரொனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த நகைக்கடை மூடப்பட்டது. மேலும், அப்பகுதி முழுவதும் தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டது.
இதனிடையே, அக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் காந்திபுரம் 3வது வீதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்த 42 பேருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் மேலும் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அந்த கடையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல, அப்பகுதியில் உள்ள ஆதித்யா ஆட்டோ மொபைல் ஸ்பேர்ஸ் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதி முழுவதும் 10 நாட்களுக்கு அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.