கோவையில் உள்ள கட்டுமான மற்றும் தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க நா.கார்த்திக் எம்எல்ஏ கோரிக்கை!

கோவை: கோவையில் உள்ள தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று நா.கார்த்திக் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை: கோவையில் உள்ள தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று நா.கார்த்திக் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவது, மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து, கோவையில் உள்ள தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இதனால், இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 45 நாள் தொடர் ஊரடங்கு முடிந்து மே மாதம் 7ம் தேதி முதல் சுயகட்டுப்பாடோடு சமூக இடைவெளி பின்பற்றி 50% ஆட்களை வைத்து வேலை செய்து கொள்ளலாம் என்ற அரசின் உத்தரவிற்கு இணங்க, வேலை கிடைத்தால் போதும் என்று அவர்களையே நம்பி உள்ள குடும்பத்தினர்களை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என இருக்கும் போது, அந்த தொழிலாளர்களுக்கு சரியான வேலை இல்லை. இதனால் இந்த தொழிலாளர்கள் வறுமையின் கடைநிலையில் உள்ளார்கள்.

தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 70% சதவிகிதம் பேர் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்பவர்கள். தினசரி வேலை கிடைத்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும், தற்போது கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் வேலை சரிவர இல்லாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மிகுந்த மன உளைச்சலிலும், வறுமையிலும் கடைநிலையில் உள்ளார்கள்.

கோவை மாநகரத்தில் மட்டும் 30,000 குடும்பங்கள் தங்கநகை தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பணி செய்து வருகின்றனர்.

தற்போது, அரசு நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் தருவோம் என அரசு அறிவித்துள்ளது. இது மிகுந்த ஏமாற்றத்தை மேற்கண்ட தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நலவாரியத்தில் புதுப்பிக்க மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை துரிதமாக நடைபெறாமல் காலம் தாழ்த்தப்படுகிறது.

எனவே கோவை மாநகரத்தில் உள்ள தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக மாதம் ஒன்றுக்கு ரூ.5000/- வீதம் நான்கு மாதங்களுக்கு ரூ.20,000/- (இருபதாயிரம்) வழங்கிட வேண்டும்.

வீட்டில் அமர்ந்து தனியாக தங்கநகை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். மேலும் இந்த தொழிலாளர்களுக்கு வங்கி மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து, தாங்கள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து, தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் துயர் துடைக்க உதவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...