கோவை: மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் மலை அடிவார கிராமங்களிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை ஆண் காட்டுயானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் மலை அடிவார கிராமங்களிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை ஆண் காட்டுயானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துரை, குரும்பனூர், தாசம்பாளையம், சமயபுரம் பகுதிகளில் இரவு நேரத்தில் நுழையும் இந்த ஒற்றை காட்டுயானை விவசாய பயிர்களான வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக இந்த யானை உதகை சாலையில் உள்ள ஓடந்துரை பகுதியில் அதிகமாக நடமாடி வருகிறது என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த காட்டுயானை மேட்டுப்பாளையம் குன்னூர் பிரதான சாலையில் உள்ள ஏ.கே.எஸ் காலனி என்ற இடத்தில் குடியிருப்புக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்து பல மணி நேரம் போராடி அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்பு பகுதிகளில் நடமாடிவரும் இந்த காட்டுயானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.