கோவை: கோவையில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்குக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 158 டாஸ்மாக் கடைகளை சேர்ந்த 150 பணியாளர்கள் பங்கேற்று மருத்துவ பரிசாதனை செய்து கொண்டனர்.
கோவை: கோவையில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்குக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 158 டாஸ்மாக் கடைகளை சேர்ந்த 150 பணியாளர்கள் பங்கேற்று மருத்துவ பரிசாதனை செய்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாரதி பூங்கா பகுதியில் உள்ள டாஸ்மார்க் மாவட்ட தலைமை அலுவலகத்தில், இன்று டாஸ்மாக் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் துவக்கி வைத்தார்.
இந்த சிறப்பு முகாமில், கோவையில் உள்ள 158 டாஸ்மாக் கடைகளிலிருந்து 150 ஊழியர்கள் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தோடு, ரூ. 1000/- மதிப்பிலான நோய் எதிர்ப்பு சக்தியுடைய மருந்து தொகுப்பு
பெட்டகங்கள் வழங்கப்பட்டது
மேலும், அனைத்து டாஸ்மார்க் கடைகள் மட்டும் குடோன்களில் கிருமிநாசினி மருந்து தெளித்து தீவிரமாக நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்.
இந்த மருத்துவ முகாமில், டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.