கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் குணமடைந்து வீடு திரும்பினார்.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் குணமடைந்து வீடு திரும்பினார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ச்சுனன் இருந்து வருகிறார். இவரது வீடு செல்வபுரம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் உள்ளது. சமீபத்தில், இவரது மகள் குடும்பத்தினர் மதுரைக்கு சென்று திரும்பியுள்ளனர்.
இதையடுத்து, வீட்டில் உள்ள 9 பேருக்கு கடந்த 29ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனனின் 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து, மூவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த 5ம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரது பேத்தி குணமடைந்த நேற்று வீடு திரும்பினார். அதேபோல, சிகிச்சை பெற்று வந்த சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், அவரது மகள், மருமகன் ஆகியோர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவ குழுவினருக்கு தனது பாராட்டுக்களை, அவர் தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ச்சுனன் இருந்து வருகிறார். இவரது வீடு செல்வபுரம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் உள்ளது. சமீபத்தில், இவரது மகள் குடும்பத்தினர் மதுரைக்கு சென்று திரும்பியுள்ளனர்.
இதையடுத்து, வீட்டில் உள்ள 9 பேருக்கு கடந்த 29ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனனின் 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து, மூவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த 5ம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரது பேத்தி குணமடைந்த நேற்று வீடு திரும்பினார். அதேபோல, சிகிச்சை பெற்று வந்த சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், அவரது மகள், மருமகன் ஆகியோர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவ குழுவினருக்கு தனது பாராட்டுக்களை, அவர் தெரிவித்தார்.