கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.80, இடையர்‌ வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்‌ பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.80, இடையர்‌ வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்‌ பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அங்குள்ள பொதுமக்களிடம்‌ கூட்டம்‌ கூடுவதை தவிர்க்கவும்‌, அனைவரும்‌ சுயக்கட்டுப்பாடுடன்‌ மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளவும்‌, முகக்கவசம்‌ அணிவதையும்‌, சமூக இடைவெளியினை பின்பற்றுவதன்‌ அவசியம்‌ குறித்தும்‌ அறிவுறுத்தினார்‌.



கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, மத்திய மண்டலத்கிற்குட்பட்ட இராஜவீதியில்‌ அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ வைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி மருந்துகளின்‌ தரம்‌ குறித்து பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ ஆய்வு செய்து, அதன்‌ மாதிரியினை தரப்பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, மத்திய மண்டலத்திற்குட்பட்ட உக்கடம்‌ லாரி பேட்டையில் செயல்பட்டு வரும்‌ காய்கறி மார்க்கெட்டில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கள ஆய்வு செய்து வியாபாரிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்தும்‌, போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்‌ செல்லுமாறு அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கே.கே.புதூர்‌ ஆரம்ப பள்ளி வளாகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ திரு.ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ மகளிர்‌ சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்த விழிப்புணர்வு கூட்டம்‌ நடைபெற்றது.



இதில் மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி அவர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அதிகாரிகள்‌, மகளிர்‌ சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்‌ கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:

நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் ‌வகையில்‌ மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்‌ தொடர்ச்சியாக, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ மகளிர்‌ சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்‌ மூலமாக அந்தந்தப்‌ பகுதிகளில்‌ உள்ள வெளியூர்‌,

வெளிமாநிலங்களிலிருந்து வந்து தங்களை தனிமைப்படுத்திக்‌ கொள்ளாத நபர்கள்‌ குறித்தும்‌, வயதானவர்கள்‌, இருதய நோயாளிகள்‌, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள்‌, சர்க்கரை நோயாளிகள்‌ போன்றவர்களின்‌ விபரங்கள்‌, மக்கள்‌ நெருக்கமாக வசிக்கும்‌ இடங்களை கண்டறிதல்‌, வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களிடம்‌ சுயவிவரங்கள்‌ போன்ற தரவுகளை சேகரிக்கும்‌ களப்பணிகளில்‌ ஈடுபடுத்தப்படவுள்ளனர்‌.

மேலும்‌, களப்பணியின்போது போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்தும்‌, முகக்கவசங்கள்‌, கையுறைகள்‌ அணிந்து மாநகராட்சி பணியாளர்களுடன்‌ இணைந்து தகவல்களை சேகரிக்கும்‌ பணிகளில்‌ மகளிர்‌ சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்‌ ஈடுபட வேண்டும்‌. அந்தந்த பகுதிகளிலுள்ள காய்ச்சல்‌, சளி, இருமல்‌ போன்ற அறிகுறிகளுடன்‌ உள்ள நபர்களுக்கு பல்ஸ்‌ மீட்டர்‌ மற்றும்‌ தெர்மல்‌ ஸ்கேன்‌ மூலமாக பரிசோதனைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்‌ 1077, 0422-2302323, 9750554321, என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...