கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று காரணமாக மூன்று மாதங்களுக்குப்பின் தேவாலயத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று காரணமாக மூன்று மாதங்களுக்குப்பின் தேவாலயத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் கடந்த 3 மாத காலமாக திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் சுகாதாரத்துறையின் அனுமதி பெற்று எளிமையாக திருமணம் நடைபெற்றது.
சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் முக கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியை கடைபிடித்து திருமணத்தில் 40 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
முன்னதாக கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே திருமணத்திற்கு வந்தவர்கள் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் கடந்த 3 மாத காலமாக திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் சுகாதாரத்துறையின் அனுமதி பெற்று எளிமையாக திருமணம் நடைபெற்றது.
சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் முக கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியை கடைபிடித்து திருமணத்தில் 40 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
முன்னதாக கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே திருமணத்திற்கு வந்தவர்கள் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.