திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த தொற்றின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த தொற்றின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
"திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் சிறப்பு குழுக்களின் ஆய்வின் போது, முககவசம் அணியாத 719 பேர் கண்டறியப்பட்டு அவர்களிடம்.இருந்து மொத்த தொகையாக ரூபாய் 82,150 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், நோய் தொற்றை தடுக்க முக கவசம் எவ்வாறு உதவி என்பதை பற்றியும் அறிவுறுத்தப்பட்டது", என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.
மேலும், இன்று திருப்பூரில் புதிதாக 240 பேர் என மொத்தம் 3297 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு 229 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்று, ஜூலை 7 ஆம் தேதி, 792 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
"திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் சிறப்பு குழுக்களின் ஆய்வின் போது, முககவசம் அணியாத 719 பேர் கண்டறியப்பட்டு அவர்களிடம்.இருந்து மொத்த தொகையாக ரூபாய் 82,150 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், நோய் தொற்றை தடுக்க முக கவசம் எவ்வாறு உதவி என்பதை பற்றியும் அறிவுறுத்தப்பட்டது", என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.
மேலும், இன்று திருப்பூரில் புதிதாக 240 பேர் என மொத்தம் 3297 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு 229 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்று, ஜூலை 7 ஆம் தேதி, 792 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.