கோவை: கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமியின் மனைவி டாக்டர் சந்திரிகா குணமடைந்து வீடு திரும்பினார்.
கோவை: கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமியின் மனைவி டாக்டர் சந்திரிகா குணமடைந்து வீடு திரும்பினார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் சங்கீதா மருத்துவமனையின் இயக்குனரும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் மனைவியுமான சந்திரிகாவுக்கு கடந்த ஜூன் 27ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதுடன் அங்கு செல்லும் பாதையையும் சுகாதாரத் துறையினர் அடைத்தனர்.
இந்த நிலையில், தற்போது அவர் கொரோனா பாதிப்பிலிருந்து பூரண நலம் பெற்று இன்று காலை வீடு திரும்பினார்.