கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசைக்கலைஞர்கள்..! தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை!

கோவை: கோவையைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கொரோனா எதிரொலியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தமிழக அரசு உரிய நிவாரண தொகை வழங்கி தங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவையைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கொரோனா எதிரொலியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தமிழக அரசு உரிய நிவாரண தொகை வழங்கி தங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய இசைக்கு மக்களிடையே ஆர்வம் குறைந்து வருவதால், பாரம்பரிய இசைக் கலைஞர்கள் மிகவும் நலிவடைந்துள்ளனர். மேலும், கலைஞர்களில் சிலர் பல்வேறு தொழில்களை நாடிச் சென்றுள்ளதால், இந்த இசைக்கலையே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் எந்த தொழிலும் தெரியாமல் இசையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் கலைஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இசைத்து தங்கள் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் கோவில் விழாக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனுமதி அளிக்கப்படவில்லை.



இதனால் இசைக் கலைஞர்களான ஆர்மோனியம், மிருதங்கம், தபேலா, புல்லாங்குழல், நாதஸ்வரம், கீ போர்டு, நாடகக்கலைஞர்கள், ஒயிலாட்டம், ஆர்கெஸ்ட்ரா, பஜனை குழுவினர் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டு மனமுடைந்து வாழ்ந்து வருகின்றனர்.

அதேபோல, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட ஆர்கெஸ்ட்ரா கலைஞர்கள் தற்போது திருமண நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறாததால் கிடைத்த வேலைக்கு சென்று பசியாற்றி வருகின்றனர். இப்படி கோவையில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு கலைஞர்கள் வறுமையின் கோரப் பிடியில் மாட்டிக் கொண்டுள்ளனர்.

மேலும், மாதம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வந்த நிலையில், தற்போது கொரொனா எதிரொலியால் தமிழக அரசு வழங்கும் ரேசன் பொருட்களை வைத்து மட்டுமே வாழ்க்கையை நடத்தி வருவதாக இசைக்கலைஞர் சேகர் வேதனை தெரிவித்துள்ளார் .

மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து தரும் ஒப்பந்ததாரர்கள் தங்களை கைவிட்டதால் தமிழக அரசை மட்டுமே நம்பி உள்ளதாக இசைக்கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அனைவரின் உள்ளங்களை மகிழ்விக்கும் இசைக்கலைஞர்கள் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் அவர்களை மீட்க தமிழக அரசு சிறப்பு நிவாரண தொகை வழங்கி அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...