கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசைக்கலைஞர்கள்..! தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை!

கோவை: கோவையைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கொரோனா எதிரொலியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தமிழக அரசு உரிய நிவாரண தொகை வழங்கி தங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவையைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கொரோனா எதிரொலியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தமிழக அரசு உரிய நிவாரண தொகை வழங்கி தங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய இசைக்கு மக்களிடையே ஆர்வம் குறைந்து வருவதால், பாரம்பரிய இசைக் கலைஞர்கள் மிகவும் நலிவடைந்துள்ளனர். மேலும், கலைஞர்களில் சிலர் பல்வேறு தொழில்களை நாடிச் சென்றுள்ளதால், இந்த இசைக்கலையே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் எந்த தொழிலும் தெரியாமல் இசையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் கலைஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இசைத்து தங்கள் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் கோவில் விழாக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனுமதி அளிக்கப்படவில்லை.



இதனால் இசைக் கலைஞர்களான ஆர்மோனியம், மிருதங்கம், தபேலா, புல்லாங்குழல், நாதஸ்வரம், கீ போர்டு, நாடகக்கலைஞர்கள், ஒயிலாட்டம், ஆர்கெஸ்ட்ரா, பஜனை குழுவினர் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டு மனமுடைந்து வாழ்ந்து வருகின்றனர்.

அதேபோல, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட ஆர்கெஸ்ட்ரா கலைஞர்கள் தற்போது திருமண நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறாததால் கிடைத்த வேலைக்கு சென்று பசியாற்றி வருகின்றனர். இப்படி கோவையில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு கலைஞர்கள் வறுமையின் கோரப் பிடியில் மாட்டிக் கொண்டுள்ளனர்.

மேலும், மாதம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வந்த நிலையில், தற்போது கொரொனா எதிரொலியால் தமிழக அரசு வழங்கும் ரேசன் பொருட்களை வைத்து மட்டுமே வாழ்க்கையை நடத்தி வருவதாக இசைக்கலைஞர் சேகர் வேதனை தெரிவித்துள்ளார் .

மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து தரும் ஒப்பந்ததாரர்கள் தங்களை கைவிட்டதால் தமிழக அரசை மட்டுமே நம்பி உள்ளதாக இசைக்கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அனைவரின் உள்ளங்களை மகிழ்விக்கும் இசைக்கலைஞர்கள் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் அவர்களை மீட்க தமிழக அரசு சிறப்பு நிவாரண தொகை வழங்கி அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...