கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர் எனப்படும் சிறு மறுசுழற்சி மையங்கள் மூலம் அங்கு குவியும் குப்பைகள், விரைவில் குறைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர் எனப்படும் சிறு மறுசுழற்சி மையங்கள் மூலம் அங்கு குவியும் குப்பைகள், விரைவில் குறைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்தும் வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு தினமும் 800 முதல் 900 மெட்ரிக் டன் குப்பைகள் வருகின்றன. இதில் மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைகிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர், அதாவது சிறு மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில் 59 மையங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. அதில் 12 மையங்கள் முழுமையாக கட்டப்பட்டுவிட்டன, விரைவில் செயல்பட துவக்க உள்ளன.
இதற்காக குப்பைகளை வீடு வீடாக மக்கும்குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க 102 டாட்டா ஏஸ் வாகனங்கள் முடிவு செய்யப்பட்டு அதில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
அதில் பச்சை நிற வண்டிகள் தினமும் வந்து மக்கும் குப்பைகளான - காய்கறி கழிவுகள், சாப்பாட்டு கழிவுகள் போன்றவற்றை பெற்று செல்லும். நீல நிற வண்டிகள் வாரம் இருமுறை மட்டுமே வந்து மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி கழிவுகள் போன்றவற்றை பெற்று செல்லும்.
இந்த மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர்களுக்கு செல்லும் இந்த வண்டிகளில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறு மறு சுழற்சி மையங்கள் பணிகள் முழுமையாக முடிந்தவுடன் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குப்பைகள் சேர்வது பெரும் அளவில் குறைக்கப்படும்,’’ என்றார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்தும் வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு தினமும் 800 முதல் 900 மெட்ரிக் டன் குப்பைகள் வருகின்றன. இதில் மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைகிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர், அதாவது சிறு மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில் 59 மையங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. அதில் 12 மையங்கள் முழுமையாக கட்டப்பட்டுவிட்டன, விரைவில் செயல்பட துவக்க உள்ளன.
இதற்காக குப்பைகளை வீடு வீடாக மக்கும்குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க 102 டாட்டா ஏஸ் வாகனங்கள் முடிவு செய்யப்பட்டு அதில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
அதில் பச்சை நிற வண்டிகள் தினமும் வந்து மக்கும் குப்பைகளான - காய்கறி கழிவுகள், சாப்பாட்டு கழிவுகள் போன்றவற்றை பெற்று செல்லும். நீல நிற வண்டிகள் வாரம் இருமுறை மட்டுமே வந்து மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி கழிவுகள் போன்றவற்றை பெற்று செல்லும்.
இந்த மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர்களுக்கு செல்லும் இந்த வண்டிகளில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறு மறு சுழற்சி மையங்கள் பணிகள் முழுமையாக முடிந்தவுடன் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குப்பைகள் சேர்வது பெரும் அளவில் குறைக்கப்படும்,’’ என்றார்.