கோவை: கோவையில் மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தலாம் என விளம்பரம் செய்த ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தலாம் என விளம்பரம் செய்த ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் என்ற இனிப்பு கடையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனோவை குணப்படுத்தலாம் என துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து வந்தார். இது சமூக வளைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்த தகவலின் பேரில் தொட்டிபாளையம் பகுதியிலுள்ள இனிப்புகடைக்கு சென்ற உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், சித்த மருத்துவ துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதில் முறையான அனுமதி இல்லாமல் 18 வகையான மூலிகை பொருட்களை பயன்படுத்தி ஸ்ரீராம் மைசூர்பா தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் பேரிடர் காலத்தில் சொந்த விளம்பரத்திற்காக மூலிகை மைசூர்பா என்ற பெயரில் கொரோனாவை குணப்படுத்தலாம் என போலியான தகவல்களை வெளியிட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து மைசூர்பா மற்றும் மூலிகைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், தவறான தகவல்களை பரப்பியதற்காக கடை உரிமையாளர் ஸ்ரீ ராம் மீது உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மூலிகை மைசூர்பா விற்பனை செய்ய எவ்வித அனுமதியும் பெறவில்லை என தெரிவித்தார்.
மேலும், ஸ்வீஸ்ட் கடையின் உரிமம் இரத்து செய்திருப்பதாகவும் சித்த மருத்துவ துறை அதிகாரிகள் மைசூர்பாவை பறிமுதல் செய்து, ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளதாகவும் ஸ்ரீ ராம் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, பேரிடர் காலத்தில் மக்களை திசை திருப்பும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மூலிகைகளின் பெயர்கள் கூட கடை உரிமையாளருக்கு தெரியவில்லை எனவும் மாவட்ட சித்த மருத்துவ துறை அலுவலர் தனம் தெரிவித்தார். மூலிகை மைசூர்பா செய்ய சித்த மருத்துவ துறையில் அனுமதி பெறவில்லை எனவும் பரிசோதனை முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் என்ற இனிப்பு கடையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனோவை குணப்படுத்தலாம் என துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து வந்தார். இது சமூக வளைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்த தகவலின் பேரில் தொட்டிபாளையம் பகுதியிலுள்ள இனிப்புகடைக்கு சென்ற உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், சித்த மருத்துவ துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில் முறையான அனுமதி இல்லாமல் 18 வகையான மூலிகை பொருட்களை பயன்படுத்தி ஸ்ரீராம் மைசூர்பா தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் பேரிடர் காலத்தில் சொந்த விளம்பரத்திற்காக மூலிகை மைசூர்பா என்ற பெயரில் கொரோனாவை குணப்படுத்தலாம் என போலியான தகவல்களை வெளியிட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து மைசூர்பா மற்றும் மூலிகைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், தவறான தகவல்களை பரப்பியதற்காக கடை உரிமையாளர் ஸ்ரீ ராம் மீது உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மூலிகை மைசூர்பா விற்பனை செய்ய எவ்வித அனுமதியும் பெறவில்லை என தெரிவித்தார்.
மேலும், ஸ்வீஸ்ட் கடையின் உரிமம் இரத்து செய்திருப்பதாகவும் சித்த மருத்துவ துறை அதிகாரிகள் மைசூர்பாவை பறிமுதல் செய்து, ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளதாகவும் ஸ்ரீ ராம் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, பேரிடர் காலத்தில் மக்களை திசை திருப்பும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மூலிகைகளின் பெயர்கள் கூட கடை உரிமையாளருக்கு தெரியவில்லை எனவும் மாவட்ட சித்த மருத்துவ துறை அலுவலர் தனம் தெரிவித்தார். மூலிகை மைசூர்பா செய்ய சித்த மருத்துவ துறையில் அனுமதி பெறவில்லை எனவும் பரிசோதனை முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.