கோவையில் ரூ1.69 லட்சம் மதிப்பில் மாற்று திறனாளிகள் மூவருக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார் பி.ஆர்.நடராஜன் எம்பி!

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்று திறனாளிகள் மூவருக்கு ரூ.1.69 லட்சத்தில் மூன்று சக்கர வாகனத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இன்று வழங்கினார்.

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்று திறனாளிகள் மூவருக்கு ரூ.1.69 லட்சத்தில் மூன்று சக்கர வாகனத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் இன்று வழங்கினார்.

இதன் ஒரு பகுதியாக 2020க்கான நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இன்று 8 மாற்று திறனாளிகளுக்கு வழங்க மூன்று சக்கர வாகனத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, மூன்று மாற்று திறனாளிகளுக்கு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான வாகனங்களை இன்று வழங்கினார்.



கோவை காந்திபுரம் 2வது வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் பி.ஆர்.நடராஜன் எம்பி பங்கேற்று பயணாளிகளான சிங்காநல்லூர் கள்ளிமடையை சேர்ந்த பாலன், சூலூர் தாலுகாவிற்குட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு, பெரியகுயிலை சேர்ந்த தங்கவேல் ஆகியோருக்கு வாகனத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள், சுகாதார ஊழியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் என தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மக்களுக்கு இவர் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்நிகழ்வில் மாற்று திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். வாகனத்தை பெற்றுக்கொண்ட பயனாளிகள் பி.ஆர்.நடராஜன் எம்பிக்கு மனநெகிழ்வோடு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...