கோவை: கோவை பூலுவபட்டி அருகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை பூலுவபட்டி அருகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பூலுவபட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து வருபவர் சதீஷ்வரன் (42). பெயின்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி அகதிகள் முகாமில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 14 நாட்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ்வரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, அவருடையசகோதரர் கீர்த்தனன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் உடற்கூறு ஆய்விற்கு பின் சதீஷ்வரனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.