சென்னை: தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல, கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் தமிழக மின்சர துறை அமைச்சர் தங்கமணி உட்பட எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
ஏற்கனவே, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.