கோவை: கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் 5000 வழங்கக்கோரி வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் 5000 வழங்கக்கோரி வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக வேலைகளை இழந்து மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5000 உதவி தொகையாக வழங்க வேண்டும், அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் சீலக்கம்பட்டி ஊராட்சி மன்றம் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறிப்பாக, கிராமப்புறத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அம்மா உணவகம் செல்லமுடியாத சிரமத்தில் உள்ளனர் என்று தெரிவித்தனர்.
எனவே, இந்த நோய் தொற்று சூழலில் மாற்று திறனாளிகள் சந்தித்து வரும் இன்னல்கள் மற்றும் வாழ்வாதாரத்தைகருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த உதவித்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு 100 சதவீத ஊனமுற்றோருக்கும் மாற்றுத்திறனாளிக்கான சான்று வழங்க மறுத்து வருவதாகவும், அவர்களை 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியமர்த்தி பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக வேலைகளை இழந்து மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5000 உதவி தொகையாக வழங்க வேண்டும், அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் சீலக்கம்பட்டி ஊராட்சி மன்றம் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறிப்பாக, கிராமப்புறத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அம்மா உணவகம் செல்லமுடியாத சிரமத்தில் உள்ளனர் என்று தெரிவித்தனர்.
எனவே, இந்த நோய் தொற்று சூழலில் மாற்று திறனாளிகள் சந்தித்து வரும் இன்னல்கள் மற்றும் வாழ்வாதாரத்தைகருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த உதவித்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு 100 சதவீத ஊனமுற்றோருக்கும் மாற்றுத்திறனாளிக்கான சான்று வழங்க மறுத்து வருவதாகவும், அவர்களை 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியமர்த்தி பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.