கோவை: கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன்(47). தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வருகிறார்.
கோவை: கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன்(47). தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வருகிறார்.
இவரது தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த நிலையில், திதி கொடுக்க தனது மனைவி செல்வியுடன் (37) குறிச்சி குளம் வந்திருந்தார்.
காரியங்கள் முடிவுற்ற நிலையில் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு உள்ளார். மனைவி பணம் தர மறுக்கவே, வீட்டிற்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் மீண்டும் குறிச்சி குளதிற்கு தனது இரு சக்கர வாகனத்தை கரையில் நிறுத்தி வைத்துவிட்டு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நம்பிராஜனின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மது அருந்த மனைவி பணம் தர மறுத்த காரணத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவரது தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த நிலையில், திதி கொடுக்க தனது மனைவி செல்வியுடன் (37) குறிச்சி குளம் வந்திருந்தார்.
காரியங்கள் முடிவுற்ற நிலையில் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு உள்ளார். மனைவி பணம் தர மறுக்கவே, வீட்டிற்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் மீண்டும் குறிச்சி குளதிற்கு தனது இரு சக்கர வாகனத்தை கரையில் நிறுத்தி வைத்துவிட்டு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நம்பிராஜனின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மது அருந்த மனைவி பணம் தர மறுத்த காரணத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.