கோவை: கொரோனா கால சிறப்பு கடனாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.10 ஆயிரம் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் இல்லாததால் சாலையோர வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை: கொரோனா கால சிறப்பு கடனாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.10 ஆயிரம் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் இல்லாததால் சாலையோர வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளும், பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகளும் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
சாலையோர வியாபாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு கடனை எவ்வாறு பெறுவது? யாரை தொடர்பு கொள்வது? எங்கு விண்ணப்பங்கள் கிடைக்கும் ? என எவ்வித வழிகாட்டுதல் இல்லாமல் உள்ளோம், என தெரிவித்தனர் வியாபாரிகள்.
இது குறித்து, கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி, கூறுகையில்:
கோவை மாநகர் முழுவதும் சாலையோர வியாபாரிகள் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வா, சாவா என்கிற நிலையில் உள்ளனர்.
இதனிடையே அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கடனை வங்கிகளிடம் சென்று கேட்டால் அலட்சியம் செய்கிறார்கள். இது குறித்து அறிவிப்புகள் வரவில்லை என்கின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகமிடம் மனு அளித்துள்ளோம். ஆனாலும் இது பற்றிய விவரங்கள் இன்னமும் தெரியவில்லை. கடனை பெற வழிகாட்டுதல் இல்லாததால், இந்த சலுகையை பெற முடியாமல் சாலையோர வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
உடனடியாக அரசு சார்பாக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க எளிய வழிமுறையை கையாள வேண்டும், என்றார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளும், பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகளும் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
சாலையோர வியாபாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு கடனை எவ்வாறு பெறுவது? யாரை தொடர்பு கொள்வது? எங்கு விண்ணப்பங்கள் கிடைக்கும் ? என எவ்வித வழிகாட்டுதல் இல்லாமல் உள்ளோம், என தெரிவித்தனர் வியாபாரிகள்.
இது குறித்து, கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி, கூறுகையில்:
கோவை மாநகர் முழுவதும் சாலையோர வியாபாரிகள் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வா, சாவா என்கிற நிலையில் உள்ளனர்.
இதனிடையே அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கடனை வங்கிகளிடம் சென்று கேட்டால் அலட்சியம் செய்கிறார்கள். இது குறித்து அறிவிப்புகள் வரவில்லை என்கின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகமிடம் மனு அளித்துள்ளோம். ஆனாலும் இது பற்றிய விவரங்கள் இன்னமும் தெரியவில்லை. கடனை பெற வழிகாட்டுதல் இல்லாததால், இந்த சலுகையை பெற முடியாமல் சாலையோர வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
உடனடியாக அரசு சார்பாக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க எளிய வழிமுறையை கையாள வேண்டும், என்றார்.