கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட கோவை எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட் 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு!

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட் 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட் 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டை சேர்ந்த 3 வியாபாரிகளுக்கும், அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக எம்.ஜி.ஆர் மார்க்கெட் மூடப்பட்டது.

மேலும், அங்குள்ள வியாபாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா நெகட்டிவ் வரும் வியாபாரிகளுக்கு வியாபாரம் நடத்த எருக்கம்பெனி மற்றும் ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் தற்காலிக மார்க்கெட் அமைத்து தரப்பட்டது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர் மார்கெட் தலைவர் அக்பர் ஹல்தாஃப் மற்றும் செயலாளர் சுப்பிரமணி கூறுகையில், மாநகராட்சி தரப்பில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வியாபாரம் நடப்பதாக தெரிவித்தனர்.

மேலும், வழக்கமான நாளில் 100க்கும் மேற்பட்ட லாரிகள் மாலை 4.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை சந்தைக்கு காய் மற்றும் கனிகள் இறக்க வருகிறது. அவை மீண்டும் வேன்கள் மற்றும் லாரிகளில் ஏற்றப்படுகின்றன பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த மொத்த சந்தையில் இருந்து தமிழ்நாட்டின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்த அவர்கள், கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் இந்த சந்தையை சார்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...