கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது.
கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை செல்வபுரம் அருகே அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இன்று 116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, கொரானோ தடுப்பு நடவடிக்கையாக அசோக் நகர், பெத்தேகவுண்டர் வீதி, வைசியாள் வீதி, பிக் பஜார் வீதி, கருப்ப கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளும், சுந்தரம் வீதி, கெம்பட்டி காலனி மற்றும் பூமார்கெட் பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது.