கொரோனாவால் அதிகரித்து வரும் 108 ஆம்புலன்ஸ் தேவை..! தொலைபேசி மூலம் ஊழியர்களை தேர்வு செய்ய முடிவு!

கோவை: கோயம்புத்தூர், திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து வரும் மருத்துவ தேவைகளுக்கு ஏற்ப 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதால் புதிதாக ஊழியர்களை தேர்ந்தெடுக்க தொலைபேசி மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக ஜிவிகே இஎம்ஆர்ஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை: கோயம்புத்தூர், திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து வரும் மருத்துவ தேவைகளுக்கு ஏற்ப 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதால் புதிதாக ஊழியர்களை தேர்ந்தெடுக்க தொலைபேசி மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக ஜிவிகே இஎம்ஆர்ஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், போதுமான அளவுக்கு ஊழியர்கள் இல்லாததால் ஊழியர்கள் பணிச்சுமையில் மாட்டிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், ஜிவிகே- இஎம்ஆர்ஐ ஆம்புலன்ஸ் நிர்வாகம் புதிதாக தொலைபேசி மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் ஊழியர்களை எடுக்க முன் வந்துள்ளது.

மேலும் இது குறித்து நிர்வாக தரப்பினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது ;-

ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனத்தில் நிறுவனத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் (பைலட்) மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் (இஎம்டி) பணியில் வேலை வாய்ப்பு உள்ளது.

நாள் : 9-7-2020 முதல் 10- 7-2020 வரை (தொலைபேசி தேர்வு).

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

ஓட்டுனர் வயது வரம்பு: 24-34.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அனுபவம்: இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டு, பேட்ஜ் எடுத்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

அவசர கால மருத்துவ உதவியாளர் வயது வரம்பு: 19-30

தகுதி: பிஎஸ்சி (நர்சிங் டி.ஜி.என்.எம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுனர் பணிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 7397444147, 7397724827, 7904633273.

அவசர கால மருத்துவ உதவியாளர் பணிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 7397444147, 7397724827, 7904633273

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...