கோவை: கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட உள்ளது.
கோவை: கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட உள்ளது.
கடந்த ஏப்ரல் 24ம் தேதி போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மூன்று காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் மாற்றபட்டது.
பின்னர் 18 நாட்களுக்கு பின் மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பணிபுரியும் போலீசார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்றி வருகின்றனர். புகார் அளிக்க வரும் நபர்களும் முகக்கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுக் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், அங்கு பணியாற்றும் பெண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட உள்ளது.
மேலும், அங்கு பணிபுரியும் காவலர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்ய அறுவுறுத்தபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல, வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த டாஸ்மாக் கடை (1633) பூட்டப்பட்டது.
இதனிடையே, டாஸ்மாக் கடை விற்பனை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்த கடையில் மது வாங்கிய மதுப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.