தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று..! கோவை போத்தனூர் காவல் நிலையம் 2வது முறையாக மூடல்!

கோவை: கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட உள்ளது.


கோவை: கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட உள்ளது.

கடந்த ஏப்ரல் 24ம் தேதி போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மூன்று காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் மாற்றபட்டது.

பின்னர் 18 நாட்களுக்கு பின் மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பணிபுரியும் போலீசார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்றி வருகின்றனர். புகார் அளிக்க வரும் நபர்களும் முகக்கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுக் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. 

இந்த நிலையில், அங்கு பணியாற்றும் பெண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட உள்ளது.

மேலும், அங்கு பணிபுரியும் காவலர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்ய அறுவுறுத்தபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல, வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த டாஸ்மாக் கடை (1633) பூட்டப்பட்டது.

இதனிடையே, டாஸ்மாக் கடை விற்பனை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்த கடையில் மது வாங்கிய மதுப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...