கோவை செல்வபுரம் பகுதியில் இயங்கி வரும் நகை பட்டறையின் உரிமையாளர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் இயங்கி வரும் நகை பட்டறையின் உரிமையாளர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் இயங்கி வரும் நகை பட்டறையின் உரிமையாளர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் மாருதி கோல்டு டிரேடர்ஸ் என்ற நகை பட்டறை இயங்கி வருகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் நடத்தி வந்தார்.

இந்நிலையில், அங்கு பணியாற்றிய 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து தொற்று ஏற்பட காரணமாக இருந்த நகை பட்டறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. அதேபோல, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகை கடைகள் மற்றும் பட்டறைகள் இயங்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல் உதவி ஆணையாளர் ரவி அளித்த புகாரின் பேரில் மாருதி கோல்டு டிரேடர்ஸ் உரிமையாளர் மீது செல்வபுரம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணா காய்கறி மார்கெட்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேர் நகை பட்டறையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 150 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...