கோவை: கோவையில் மாங்கரை சோதனை சாவடி அருகே டிப்பர் லாரி மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: கோவையில் மாங்கரை சோதனை சாவடி அருகே டிப்பர் லாரி மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் மாங்கரை சோதனை சாவடி அருகே வசித்து வருபவர் பழினிச்சாமி(70). இவரது மனைவி மாரம்மாள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெரிய தடாகம் பிரிவு பகுதியில் உள்ள அடுமனை ஒன்றில் காசாளராக பணியில் சேர்ந்து உள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலை 6 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றபோது செங்கல் சூளைக்கு பயன்படுத்தப்படும் மண் எடுத்த சென்ற டிப்பர் லாரி மோதியதில் பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இதனை கண்ட அவரது இளைய மகனின் நண்பர் TKT NPK என்ற டிப்பர் லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரது மகன் சின்னதடாகம் நஞ்சுண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் இதனை டிப்பர் லாரியின் உரிமையாளர் ஒப்புகொள்ள மறுத்துள்ளார். பின்னர் ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பழனிச்சாமியின் மகன் கூறுகையில், டிப்பர் லாரியில் மண் எடுத்து வாகனத்தை ஓட்டி வந்தது 16 வயது சிறுவன் எனவும் இந்த பகுதியில் மண் எடுக்க தடை உள்ள நிலையில் மண் கடத்தல் அதிக அளவில் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். சிறுவன் அதிவேகமாக வாகனத்தை இயக்கி மோதியதில் தனது தந்தை உயிரிழந்ததாக கூறியவர், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மாங்கரை சோதனை சாவடி அருகே வசித்து வருபவர் பழினிச்சாமி(70). இவரது மனைவி மாரம்மாள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெரிய தடாகம் பிரிவு பகுதியில் உள்ள அடுமனை ஒன்றில் காசாளராக பணியில் சேர்ந்து உள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலை 6 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றபோது செங்கல் சூளைக்கு பயன்படுத்தப்படும் மண் எடுத்த சென்ற டிப்பர் லாரி மோதியதில் பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இதனை கண்ட அவரது இளைய மகனின் நண்பர் TKT NPK என்ற டிப்பர் லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரது மகன் சின்னதடாகம் நஞ்சுண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் இதனை டிப்பர் லாரியின் உரிமையாளர் ஒப்புகொள்ள மறுத்துள்ளார். பின்னர் ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பழனிச்சாமியின் மகன் கூறுகையில், டிப்பர் லாரியில் மண் எடுத்து வாகனத்தை ஓட்டி வந்தது 16 வயது சிறுவன் எனவும் இந்த பகுதியில் மண் எடுக்க தடை உள்ள நிலையில் மண் கடத்தல் அதிக அளவில் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். சிறுவன் அதிவேகமாக வாகனத்தை இயக்கி மோதியதில் தனது தந்தை உயிரிழந்ததாக கூறியவர், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.