கோவை மண்டலத்தில் அரசு ஊழியர்கள் வசதிக்காக 35 அரசு பேருந்துகள் இயக்கம்!

கோவை: அரசு ஊழியர்கள் வசதிக்காக கோவை மண்டலத்தில் 35 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோவை: அரசு ஊழியர்கள் வசதிக்காக கோவை மண்டலத்தில் 35 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகம் முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை பொது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி கோவையில் அரசு பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படவில்லை.

இதனிடையே, போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம், காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் ஆகியவை பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய கோட்டங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் வசதிக்காக 35 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும், டவுன் பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர் மற்றும் ஊரகப்பகுதிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் 27 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே போல் ஊட்டிக்கு 4, திருப்பூருக்கு 4 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...