கோவை: ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை மிரட்டும் வகையில் பேசி வரும் மாரிதாஸ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை மிரட்டும் வகையில் பேசி வரும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
ஊடகம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம், ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். சாமானிய மக்களின் வேதனைக் குரல்கள் ஊடகங்கள் வழியே ஒலிக்கப்படுகிறது. மேலும், அரசின் கொள்கைகளும், நலத்திட்டங்களும் மக்களை சென்றடைகிறதா என்று கண்காணிக்கும் வேலையையும் ஊடகங்களே முன்னின்று செய்து வருகின்றன.
இப்படிப்பட்ட ஊடகங்களையும், ஊடகங்களில் பணியாற்றுவோரையும் ஒரு சிலர் தங்களது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக, அச்சுறுத்தும் விதமாக ஊடகவியலாளர்களுக்கு நோக்கம் கற்பிப்பதுடன், அவர்களின் வீட்டில் உள்ளோரையும் சமூக ஊடகங்களில் பின் தொடர்ந்து கண்காணிக்கும் மிகக் கேவலமான செயல்களில் ஈடுபட்டு மிரட்டி வருகின்றனர்.
ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்திப் பேசிய எஸ்.வி.சேகர் போன்றோர் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காததன் விளைவே, இம்மாதிரியான வெற்று மனிதர்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள்.
யூ டியூப்பில் ஒரு பதிவை போட்டு நாள்தோறும் இம்மாதிரியான உளறல்களில் ஈடுபடுவோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இது போன்று பொதுவெளியில் பத்திரிகையாளர்களின் படங்களை போட்டு பொய்யாக கட்டுக்கதைகளை சொல்லி, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எதிராக ஆபத்து நேரும் வகையில் தூண்டிவிடும் தரம் தாழ்ந்தவர்களை செயல்படாத வகையில் அரசு முடக்க வேண்டும் என்று தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
ஊடகம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம், ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். சாமானிய மக்களின் வேதனைக் குரல்கள் ஊடகங்கள் வழியே ஒலிக்கப்படுகிறது. மேலும், அரசின் கொள்கைகளும், நலத்திட்டங்களும் மக்களை சென்றடைகிறதா என்று கண்காணிக்கும் வேலையையும் ஊடகங்களே முன்னின்று செய்து வருகின்றன.
இப்படிப்பட்ட ஊடகங்களையும், ஊடகங்களில் பணியாற்றுவோரையும் ஒரு சிலர் தங்களது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக, அச்சுறுத்தும் விதமாக ஊடகவியலாளர்களுக்கு நோக்கம் கற்பிப்பதுடன், அவர்களின் வீட்டில் உள்ளோரையும் சமூக ஊடகங்களில் பின் தொடர்ந்து கண்காணிக்கும் மிகக் கேவலமான செயல்களில் ஈடுபட்டு மிரட்டி வருகின்றனர்.
ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்திப் பேசிய எஸ்.வி.சேகர் போன்றோர் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காததன் விளைவே, இம்மாதிரியான வெற்று மனிதர்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள்.
யூ டியூப்பில் ஒரு பதிவை போட்டு நாள்தோறும் இம்மாதிரியான உளறல்களில் ஈடுபடுவோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இது போன்று பொதுவெளியில் பத்திரிகையாளர்களின் படங்களை போட்டு பொய்யாக கட்டுக்கதைகளை சொல்லி, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எதிராக ஆபத்து நேரும் வகையில் தூண்டிவிடும் தரம் தாழ்ந்தவர்களை செயல்படாத வகையில் அரசு முடக்க வேண்டும் என்று தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.